தேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்
Recommended Video
சென்னை: பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதிய கலவரம் ஒரு திட்டமிட்ட கலவரம் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி கலவரம் ஒரு திட்டமிட்ட கலவரம் ஆகும், இந்த கலவரத்தை அந்தப் பகுதியில் இந்து முன்னணி பொறுப்பாளர் ராஜசேகரன் தான் நடத்தினார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதாகக் கூறினார்.

மேலும், சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என்பதற்காகவே அந்த கிராமத்தில் சாதிய மோதலை இந்துத்துவா அமைப்புகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் திட்டமிட்டு இக்கலவரத்தில் முக்கிய காரணமாக விளங்குகிறது என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது எனவே அப்பகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றார். இதேபோல் கன்னியாகுமரியில் பாஜக தூண்டுதலின் பேரில் கிறிஸ்துவ மக்களின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டதாகவும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, தேர்தல் ஆணையர் ஒரு நேர்மையற்றவர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இச்சந்திப்பின் போது விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications