கத்துக்குட்டிகளுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம்.. அதிமுகவில் சேர்ந்த உடன் காயத்ரி ட்வீட்
சென்னை: எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றி நடை போட உழைப்போம் என்று அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், ட்விட்டரில் அரசியல் செய்து வந்தார். அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் தினசரியும் பதிவிட்டு வந்தார். இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

கயாத்ரி ராகுராமை வரவேற்று அதிமுகவினர் பலரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் தனது முதல் ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக.
50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதிமுகவில் இணைவதற்கு முன்பிருந்தே பாஜகவிற்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார் காயத்ரி ரகுராம். அதிமுகவில் இணைந்த உடன் எதிரிகள், கத்துக்குட்டிகள் என்று நேரடியாகவே தாக்கி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications