அதிகாலையிலேயே வந்த அமலாக்க துறை.. சென்னையில் 10+ இடங்களில் அதிரடி ரெய்டு.. என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை தொடங்கிய இந்த ரெய்டு பல மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது

கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அமலாக்க துறை சோதனை தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது. அதிலும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்க துறை ரெய்டு மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

Enforcement Dept raids at 10 places in Chennai connected to Mumbai based company

ரெய்டு: இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 8 வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

மும்பை நிறுவனம்: அந்த மும்பை நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. காலை தொடங்கிய இந்த ரெய்டு பல மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது

எந்த காரணத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சோதனை முழுமையாக நடந்து முடிந்த பிறகு ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+