தனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை, தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைகழகம் நடத்தி வந்த பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்பு, பல்வேறு குளறுபடிகளால் நடப்பாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம் சென்றுள்ளது.

கடந்த வாரம் முதல் துவங்கிய கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு மே 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 20-ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்க உள்ள நிலையில், ஒற்றைசாளர முறையில் கவுன்சிலிங் நடத்த போதுமான வசதிகள் இல்லை என கூறி மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பணி தனியார் நிறுவனத்திடம் சென்றால் ஒரு இயந்திரதனமான வேலையாக தான் இது நடக்கும். குறித்த தேதியில் துவக்கி குறித்த தேதியில் முடிப்பது மட்டுமே தனியார் நிறுவனத்தின் இலக்காக இருக்கும். மாணவர்கள் நலனில் அக்கறை இருக்காது.
மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் சேவையாக செய்ய மாட்டார்கள். மாணவர்களின் மனநிலையும் அவர்களுக்கு புரியாது, பெற்றோர்களின் நிலையும் தனியாருக்கு புரியாது. ஆக இது ஒரு நடத்தி முடிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற சம்பிரதாய ரீதியில் தான் நடக்குமே ஒழிய, சேவை நோக்கில் நடக்க போவது இல்லை என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைகழகம் கைவிட்டதே மிகப்பெரிய தவறு என கூறியுள்ள கல்வியாளர்கள், இந்த நிலையில் தொழில் நுட்ப கல்வி இயக்கமும் தனியாரிடம் கவுன்சிலிங் பொறுப்பை ஒப்படைக்க நினைப்பது மாணவர்கள் நலனை முற்றிலுமாக கைகழுவும் செயல் என கடுமையாக சாடியுள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications