தனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை, தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைகழகம் நடத்தி வந்த பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்பு, பல்வேறு குளறுபடிகளால் நடப்பாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம் சென்றுள்ளது.

கடந்த வாரம் முதல் துவங்கிய கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு மே 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 20-ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்க உள்ள நிலையில், ஒற்றைசாளர முறையில் கவுன்சிலிங் நடத்த போதுமான வசதிகள் இல்லை என கூறி மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பணி தனியார் நிறுவனத்திடம் சென்றால் ஒரு இயந்திரதனமான வேலையாக தான் இது நடக்கும். குறித்த தேதியில் துவக்கி குறித்த தேதியில் முடிப்பது மட்டுமே தனியார் நிறுவனத்தின் இலக்காக இருக்கும். மாணவர்கள் நலனில் அக்கறை இருக்காது.
மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் சேவையாக செய்ய மாட்டார்கள். மாணவர்களின் மனநிலையும் அவர்களுக்கு புரியாது, பெற்றோர்களின் நிலையும் தனியாருக்கு புரியாது. ஆக இது ஒரு நடத்தி முடிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற சம்பிரதாய ரீதியில் தான் நடக்குமே ஒழிய, சேவை நோக்கில் நடக்க போவது இல்லை என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைகழகம் கைவிட்டதே மிகப்பெரிய தவறு என கூறியுள்ள கல்வியாளர்கள், இந்த நிலையில் தொழில் நுட்ப கல்வி இயக்கமும் தனியாரிடம் கவுன்சிலிங் பொறுப்பை ஒப்படைக்க நினைப்பது மாணவர்கள் நலனை முற்றிலுமாக கைகழுவும் செயல் என கடுமையாக சாடியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications