சூரப்பாவின் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால்... நடவடிக்கைக்கு பரிந்துரை.. விசாரணை ஆணையம் அதிரடி..!
சென்னை: முறைகேடுகள் தொடர்பான புகார்களில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. பணி நியமன விவகாரத்தில் முறைகேடு நிகழ்த்தியதாக சூரப்பா மீது எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ஆணையத்தில் இடம்பெற்ற 7 பேரும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், புகார் கொடுத்தவர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
விசாரணையின் போது அவர்கள் முன் வைத்த புகார்களுக்கு விளக்கம் கோரி சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்க நோட்டீஸ்க்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சூரப்பா விசாரணை ஆணையத்தின் நோட்டீஸ்க்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூரப்பாவின் பதிலை பொறுத்து அவர் மீதான விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு செல்லவுள்ளது.
சூரப்பாவின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் விசாரணை ஆணையத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆட்சி மாறிய நிலையில் சூரப்பா மீதான விசாரணையும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications