சூரப்பாவின் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால்... நடவடிக்கைக்கு பரிந்துரை.. விசாரணை ஆணையம் அதிரடி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முறைகேடுகள் தொடர்பான புகார்களில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. பணி நியமன விவகாரத்தில் முறைகேடு நிகழ்த்தியதாக சூரப்பா மீது எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Enquiry commission says, If Surappa explanation is not satisfactory, we will recommend action

இதையடுத்து அந்த ஆணையத்தில் இடம்பெற்ற 7 பேரும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், புகார் கொடுத்தவர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

விசாரணையின் போது அவர்கள் முன் வைத்த புகார்களுக்கு விளக்கம் கோரி சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்க நோட்டீஸ்க்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சூரப்பா விசாரணை ஆணையத்தின் நோட்டீஸ்க்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூரப்பாவின் பதிலை பொறுத்து அவர் மீதான விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு செல்லவுள்ளது.

சூரப்பாவின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் விசாரணை ஆணையத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆட்சி மாறிய நிலையில் சூரப்பா மீதான விசாரணையும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+