டிடிவி தினகரனிடம் கேள்வி.. பாய்ந்து பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி.. பிரஸ்மீட்டில் "தக்" சம்பவம்
செங்கல்பட்டு: பழனிசாமி, டிடிவி தினகரன் இருவரிடமும் அவர்கள் இடையே நிலவி வந்த பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, வேறு ஏதாவது நல்ல கேள்வி கேளுங்கள். இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உள்ள கட்சிகள் கூட்டணியாக இணைவோம் என்று கூறினார்.
மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக அன்புமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், 5 லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாடாக நடந்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

திமுக ஒரு தீயசக்தி. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி தலைவிரித்தாடுகிறது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. தமிழ்நாட்டின் நலனுக்காக மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலிமையானது. அமமுக வருகை மேலும் வலிமையாக்கியுள்ளது.
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன. அதை வெளிப்படையாக கூற முடியாது. இணையும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்போம். நாங்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்று ஊடகங்கள் நினைக்கின்றன. நானும் டிடிவி தினகரனும் அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டோம். கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இருவரிடமும் அவர்கள் இடையே நிலவி வந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது டென்ஷன் ஆன எடப்பாடி, வேறு ஏதாவது நல்ல கேள்வி கேளுங்கள். இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உள்ள கட்சிகள் கூட்டணியாக இணைவோம். விவசாயிகள், அரசு ஊழியர்கள் என்று தினசரி ஏதாவது போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை போராட்ட பூமியாக மாற்றியுள்ளனர்.
திமுகவை பற்றியும், ஸ்டாலின் பற்றியும் வைகோ விமர்சிக்கவில்லையா. இப்போது வைகோ திமுகவுடன் இணையவில்லையா. எங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்க வேண்டாம். அம்மா விட்டு சென்ற பணிகளை நாங்கள் செய்வோம். காங்கிரஸைப் பற்றி திமுக விமர்சிக்கவில்லையா. அறிவாலயத்தில் முதல் தளத்தில் ரைடு நடக்கும்போது, தரைத்தளத்தில் கூட்டணி பேசியவர்கள் எங்களைப் பற்றி பேசலாமா என்றார்.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications