EPS Vs OPS: அதிமுக ஒருங்கிணைப்பு.. எண்ட் கார்டு போட்ட எடப்பாடி.. ஓபிஎஸ்க்கு இடமே கிடையாது என அறிவிப்பு
சென்னை: ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார். அதிமுக பொதுக்குழுவில் தான் அவரை நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. பொதுச்செயலாளர் முடிவு எடுக்கவில்லை. பொதுக்குழு தான் முடிவு எடுத்தது. எனவே மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.
காலையில், 'ஒன்றிணைப்புக்கு நான் ரெடி.. எடப்பாடி பழனிசாமி அண்ணன் ரெடியா".. என்று ஓ பன்னீர் செல்வம் கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

நான் ரெடி.. அண்ணன் ரெடியா?
அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக டிடிவி தினகரன் இணைந்தார். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியை பங்காளி என்றும் டிடிவி தினகரன் கூறியது இதுதான்.டா அரசியல் என அனைவரையும் புருவம் உயர்த்த செய்திருந்தது. இதனால் அடுத்ததாக ஓ பன்னீர் செல்வமும் இணைவார் என பேசப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல இதுவரை முடிவை அறிவிக்காமல் இருக்கும் ஓ பன்னீர் செல்வம் தேனியில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அதிமுகவில் இணைய தயராக இருப்பதாக முன்னள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். ஒன்றிணைய நான் ரெடி.. அண்ணன் எடப்பாடி ரெடியா? என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை
ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று சேலம் ஓமலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை. பொதுக்குழு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயத்தில் திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும். ஓ பன்னீர் செல்வம் அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார்.
ஓபிஎஸ்சின் அடுத்த பிளான் என்ன?
அப்படி இருக்கையில் மீண்டும் இணைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது அதிமுக பொதுச்செயலாளர் முடிவு கிடையாது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடியும். அதிமுக தொண்டர்கள் எல்லாரும் ஒன்று கூடி எடுத்த முடிவு.. எனவே இணைவு என்ற பேச்சிறே இடமில்லை" என்றார்.
ஒன்றிணைப்புக்கு நான் ரெடி.. எடப்பாடி பழனிசாமி ரெடியா என்றும், எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டிருந்த நிலையில், இணைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்று கட்சியில் இணைந்த நிலையில் தற்போது தனித்தே விடப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பன்னீர்செல்வத்தை எடப்பாடி சேர்க்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான் எனவும், பன்னீர்செல்வம் வேறு எங்கும் போக மாட்டார்.. பாஜக கூட்டணிக்கு உள்ளேயே இருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications