ஈரோடு கிழக்கு..ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை..மக்கள் செல்வாக்கை இழக்கும் இபிஎஸ்..சொல்வது தனியரசு
ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி பின்னடைவை சந்திப்பார் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு. அதிமுகவை வலிமைப்படுத்த பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவதாகவும் தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைக் கூட எடப்பாடி பழனிச்சாமியால் பெற முடியாது என்றும் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இதனால் இரட்டை இலை முடங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. பாஜக, இருவரில் யாரை ஆதரிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.
அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவு பட்ட போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர் அணியாக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக நின்றார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த போது கொங்கு மண்டலத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தவர் தனியரசு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளார். இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் தனியரசு நேரில் சந்தித்து பேசினார் தனியரசு. முகம் முழுக்க புன்னகையுடன் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். பதிலுக்கு அவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.

ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், வழக்குகள் குறித்தும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசினேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி வலிமையாக உள்ளது. ஒன்று பட்டிருந்த அதிமுக தற்போது பிளவு பட்டிருக்கிறது. கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடிக்கும் ஒற்றுமையில்லை. எடப்பாடி பழனிச்சாமி திருந்தாமல் வேட்பாளரை அறிவிக்கப்போகிறார். எடப்பாடி பழனிச்சாமி பெரிய பின்னடைவை சந்திக்கப்போகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக வலிமையடைய வேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு அளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எதிராக கட்சியை ஒருங்கிணைக்க பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தேன். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என்றும் தனியரசு தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள், தமிழக வாக்காள பெருமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சதிகார போக்கினை நிராகரிப்பார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு களத்திற்கு போகும் எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை சந்திப்பார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே சிதற வாய்ப்பு உள்ளது எடப்பாடி அணிக்கு கிடைக்காது என்றும் தனியரசு தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications