Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு..ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை..மக்கள் செல்வாக்கை இழக்கும் இபிஎஸ்..சொல்வது தனியரசு

ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி பின்னடைவை சந்திப்பார் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு. அதிமுகவை வலிமைப்படுத்த பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவதாகவும் தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைக் கூட எடப்பாடி பழனிச்சாமியால் பெற முடியாது என்றும் கூறினார்.

 Erode East by election: Without O.Panneerselvam there is no AIADMK says Thaniyarasu

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இதனால் இரட்டை இலை முடங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. பாஜக, இருவரில் யாரை ஆதரிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.

அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவு பட்ட போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர் அணியாக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக நின்றார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த போது கொங்கு மண்டலத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தவர் தனியரசு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளார். இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் தனியரசு நேரில் சந்தித்து பேசினார் தனியரசு. முகம் முழுக்க புன்னகையுடன் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். பதிலுக்கு அவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.

 Erode East by election: Without O.Panneerselvam there is no AIADMK says Thaniyarasu

ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், வழக்குகள் குறித்தும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசினேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி வலிமையாக உள்ளது. ஒன்று பட்டிருந்த அதிமுக தற்போது பிளவு பட்டிருக்கிறது. கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடிக்கும் ஒற்றுமையில்லை. எடப்பாடி பழனிச்சாமி திருந்தாமல் வேட்பாளரை அறிவிக்கப்போகிறார். எடப்பாடி பழனிச்சாமி பெரிய பின்னடைவை சந்திக்கப்போகிறார்.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக வலிமையடைய வேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு அளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எதிராக கட்சியை ஒருங்கிணைக்க பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தேன். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என்றும் தனியரசு தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள், தமிழக வாக்காள பெருமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சதிகார போக்கினை நிராகரிப்பார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு களத்திற்கு போகும் எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை சந்திப்பார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே சிதற வாய்ப்பு உள்ளது எடப்பாடி அணிக்கு கிடைக்காது என்றும் தனியரசு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+