சாதி அடையாளத்தை விடுங்க பாஸ்! அதைவிட ஆபத்தானது அரசியல் அடையாளம்! கொங்கு ஈஸ்வரன் ஆதங்கம்!
சென்னை: கிராமங்களில் சாதி அடையாளங்களை மறைக்க முன்வருபவர்கள் அரசியல் அடையாளங்களையும் மறைக்க முன் வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்காலங்களில் மக்கள் சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை விட அரசியல் ரீதியாக பிரிந்து இருப்பது தான் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சாதியை காட்டிலும் நான் இந்தக் கட்சி, நான் அந்தக் கட்சி என மக்கள் மத்தியில் பிரிவுகள் இருப்பதாக வேதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஸ்வரன் கூறியிருப்பதாவது;

சாதி அடையாளம்: ''தூத்துக்குடி மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட இடங்களில் 64 ஊராட்சிகளில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டுகள் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. நிகழ்காலங்களிலே மக்கள் சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை விட அரசியல் ரீதியாக அழுத்தமாக பிரிந்து இருப்பதை உணர முடிகிறது.''
அரசியல் கட்சிகள்: ''சாதிகளுக்கு இடையேயான வன்முறையை விட அரசியல் கட்சிகளுக்கு இடையேயான வன்முறைகள் அதிகம் காணப்படுகின்றன. தங்கள் அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபடுகின்ற நிகழ்வுகள் அதிகம் தென்படுகின்றன. இரண்டு கட்சிகளுக்கு இடையே நீண்ட பகையாக இது மாறி போகிறது. ஒரே சாதியை சேர்ந்தவர்கள் இரண்டு அரசியல் கட்சிகளாக பிரிந்து பகைமை பாராட்டுகின்ற நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.''
சட்ட ஒழுங்கு: ''சில நேரங்களில் ஒரே கட்சி உள்ளேயே பதவி சண்டைக்காக நடக்கின்ற நிகழ்வுகளும் உண்டு. இரண்டு கட்சிகளுக்கு இடையே சுவர் எழுதுவதிலே தொடங்கி கட்சி கொடிகள் நடுகின்ற வரை சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் சாதிகளில் ஒருவருக்கொருவர் இணக்கமான உறவோடு இருப்பதையும் அரசியல் கட்சி மாறுபாடுகளால் ஏற்படுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகமாகவும் இருக்கின்றன.''
அரசியல் அடையாளம்: ''இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் அரசியல் அடையாளங்கள் தான் சாதி அடையாளங்களை விட அதிகமான மாறுபட்ட கருத்துக்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கின்றன. வெளிக்காட்டி கொள்கின்ற சாதி அடையாளங்களை மறைக்க முன்வருபவர்கள் அரசியல் அடையாளங்களை மறைத்துக் கொள்ள முன் வந்தால் இந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.''
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications