சார்ஜிங் ஸ்டேஷன் பற்றி இனி கவலை வேண்டாம்! சென்னையில் 9 இடங்கள் தேர்வு.. 2 வாரத்தில் தொடங்கும் பணிகள்
சென்னை: சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முதல்கட்டமாக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து தேர்வு செய்துள்ள நிலையில், 2 வாரங்களில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்கு அதிக தொகை செலவு செய்வதற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு கூடுதல் எளிமையாக அமைந்துள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்
ஏனென்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஒருநாள் சார்ஜிங் செய்வதற்கு வெறும் 2 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகிறது. இதற்கான கட்டணம் ரூ.10க்கும் குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஒருநாளில் மட்டும் குறைந்தது ரூ.100 வரை செலவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
சார்ஜிங் ஸ்டேஷன்
இதனால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த வாகனங்கள் சார்ஜின்றி நின்று போனால், அதனை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அது ஒன்றும் மட்டுமே பின்னடைவாக இருந்து வரும் சூழலில், பொதுமக்கள் தரப்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கைகள் எழுந்தன.
அதிகரிக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்
ஏனென்றால் சென்னையின் சில பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது மின்சார வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளது. அதேபோல் மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் போட்டுக் கொள்ளும் வகையில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது நெடுஞ்சாலையில் வரும் கார்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.
9 இடங்கள் தேர்வு
இதனிடையே சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பாக திமுக கவுன்சிலர் செம்மொழி தரப்பில் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு, விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்கள்?
அதன்படி பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங், தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங், தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம், செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு, மெரினா கடற்கரை பார்க்கிங், அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா, மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா ஆகிய 9 இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications