சட்டசபைக்கு ஆளுநர் ரவி வருவது இதுவே கடைசியாக இருக்கும்! ஈவிகேஎஸ் இளங்கோவன் தடாலடி- ஏன் அப்படி சொன்னார்
சென்னை: ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கும்.

அதன்படி இந்தாண்டும் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இது ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று காலை அனைத்து உறுப்பினர்களும் கூடியிருந்த நிலையில், ஆளுநர் ரவியும் அவைக்கு வந்தார். ஆனால், அதன் பிறகு அங்கு நடந்தது வேறாகவே இருந்தது.
ஆளுநர் ரவி: ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை என்று வைத்துக் கொள்ளலாம். இதை ஒவ்வொரு ஆண்டும் அரசு தான் தயார் செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பும். சட்டசபை கூடும் நாளில் அதை ஆளுநர் வாசிப்பார். அதுதான் மரபு.. ஆனால், இந்த உரையில் இருக்கும் சில கருத்துகளில் உடன்பாடும் இல்லை என்று கூறிய ஆளுநர் ரவி, இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனச் சொன்னார்.
மேலும், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து தான் கோரிக்கை விடுத்த போதிலும் அதை ஏற்காமல் தேசிய கீதத்தைப் புறக்கணித்ததாக கூறினார். இந்த இரு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி, இந்த அவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டும் என மட்டும் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார்.
தலைவர்கள் கருத்து: இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவே இல்லை.. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை. ஆளுநர் தனது உரையை வாசித்து இருக்க வேண்டும் என்று இந்த செயலுக்கு ஆளும் தரப்பினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுவே கடைசி: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சட்டசபை வளாகத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "என்னைப் பொறுத்தவரை ஆளுநர் ரவி சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும்.. இனிமேல் அவர் இந்த அவைக்கு வர வாய்ப்பு கிடையாது.. காரணம் தேர்தல் முடிந்த உடன் இவரைத் தூக்கி எறிவார்கள்.
தமிழ்நாட்டில் எப்போதும் எந்த நிகழ்விலும் தேசிய கீதம் என்பது நிகழ்ச்சி முடிந்தவுடன் தான் வாசிப்பார்கள். இது கூட தெரியாத ஒரு ஆளுநர்.. தேசிய கீதம் பட வேண்டும் எனச் சொல்வது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது. இப்படி அவர் செய்வதற்குப் பதிலாக அவர் வாராமலேயே இருந்து இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார். அதாவது தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் புதிய அரசு அமையும் என்றும் அதன் பிறகு ஆளுநர் ரவி நீக்கப்படுவார் என்பதையே ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
முன்னதாக ஆளுநர் ரவி உரையை வாசிக்க மறுத்த நிலையில், உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். மேலும், அரசு தயார் செய்து தந்த உரையில் இருந்தது மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications