அண்ணே அண்ணே.. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு.. ஆர்ப்பாட்டத்தில் பாட்டு பாடி ஜெயக்குமார் கலகலப்பு
சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக நடத்திய போராட்டத்தின் போது "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே" பாடலை சிப்பாய்க்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் பெயரை போட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்தது.
திமுக அரசை கண்டித்து
இந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என அதிமுக விமர்சனம் செய்தது.
திமுக வாக்குறுதிகள்
இந்த நிலையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கைகளில் பதாகைகளுடன் கவன ஈர்ப்பு முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென அவர் பாட்டு பாடி கலகலப்பூட்டினார்.
திரைப்பட பாடல்
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் போராட்டத்தின் போது திடீரென இந்த திரைப்பட பாடல் நினைவிற்கு வந்தது...👇
அண்ணே அண்ணே..
ஸ்டாலின் அண்ணே..
நம்ம ஊரு நல்ல ஊரு...
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே...
அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு.... என பாடினார். பொதுவாக ஜெயக்குமார் நன்றாக பாட்டு பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.