சென்னைக்கு வந்தால் அப்பா 1 நாள் கூட இருக்கமாட்டார்! ஊர் தான் அவருக்கு எல்லாமே! -விஜயபாஸ்கர்
சென்னை: சென்னைக்கு வந்தால் தனது அப்பா 1 நாள் கூட தங்கள் வீட்டில் இருக்க மாட்டார் என்றும் ஊர் தான் அவருக்கு எல்லாமே எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அந்தளவுக்கு மாடு, கன்று, விவசாயம், ஊர், என தனது தந்தை உழைத்துக்கொண்டே இருப்பார் என்றும் சென்னையில் வீட்டில் சும்மா இருப்பது அவருக்கு பிடிக்காது எனவும் கூறியுள்ளார். தாங்கள் ஒரு நாளாவது இருந்துவிட்டு ஊருக்கு போகுமாறு எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்கமாட்டார் எனக் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

1984ஆம் ஆண்டே எம்.ஜி.ஆரால் சீட் கொடுக்கப்பட்டு சேர்மன் ஆனவர் தனது தந்தை சின்னத்தம்பி என்றும் இன்று வரை தனது அப்பாவை ஊர்க்காரர்கள் சேர்மன் என்று தான் அழைப்பார்கள் எனவும் பெருமிதம் தெரிவித்த அவர், இப்போது தான் தன்னை அமைச்சர் என்று அழைக்கிறார்கள், இதற்கு முன்னதாக தன்னையும் சேர்மன் மகன் என்று தான் ஊரில் அழைப்பார்கள் எனக் கூறியுள்ளார். அதேபோல் ஊரில், சொந்த பந்தங்களில் ஏற்படும் சின்னச்சின்ன குடும்ப பிரச்சனைகளை சமரசம் பேசி உடனே சேர்த்து வைத்துவிடுவார் தனது தந்தை என மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருக்கும் போதோ, புதுக்கோட்டையில் இருக்கும் போதோ சைக்கிளில் தன்னால் செல்ல முடியாத சூழல் இருப்பதால், இலுப்பூர் பக்கம் வந்தால் மட்டும் எப்போதுமே சைக்கிளில் தான் பயணிப்பேன் எனவும் கூறியுள்ளார். தாம் பிறந்ததே இலுப்பூர் அரசு மருத்துவமனையில் தான் என்று கூறிய அவர், தாம் வளர்த்த கொம்பன் காளை குறித்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.
விராலிமலை சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்டு தம்பிதுரைக்கு எதிராக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிடம் விருப்பமனு கொடுத்தவர் விஜயபாஸ்கர் தந்தை சின்னத்தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications