கையில குச்சி வேற.. அதைவிடுங்க.. சுப்பிரமணியனை பாத்தீங்களா.. ஜப்பான் போயிகூட அதை விடலயே.. சபாஷ் மா.சு
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திமுகவினர் அதை ஷேர் செய்தும் வருகிறார்கள்.. என்ன காரணம்?
அரசியலையும் தாண்டி சிறந்த தடகள வீரராக திகழ்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்... 12 நாடுகள், 111 மாரத்தான் போட்டிகள் என இன்றைய இளைய தலைமுறையினருக்கே சவால் விடும் அளவுக்கு சாதனைகளை படைத்தவர்..
எப்போதுமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருபவர்.. 2 வருடங்களுக்கு முன்பு அதாவது தொற்று உச்சத்தில் இருந்தபோதுகூட தன்னுடைய உடற்பயிற்சிகளை விடாமல் செய்து அசத்தியவர்.

ஜாக்கிங்
அந்த நேரத்தில், வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றை சாலைகளில் மேற்கொள்ள முடியாது என்பதால், அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே "8 வடிவ ஓடுதளத்தை" அமைத்து, 4 மணி நேரம் கேப் விடாமல், அதாவது 4 மணி நேரம் 8 நிமிடம், 18 விநாடி, 1010 முறை ஓடி சாதனை படைத்து ஆச்சரியத்தை கிளப்பியவர். இவர்தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால், இவர் பேரனும் இவரை போலவே இருக்கிறார்.. அவரும் மாரத்தான் ஓடுகிறாராம்.. இந்த விஷயம் மா.சு சொல்லிதான் நமக்கே தெரியவந்தது.. அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டையும் 2 வருடங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.

தாத்தா பூரிப்பு
அதில், "தாத்தாவாகிய நான் 50 வயதுக்கு பிறகு தான் மாரத்தான் போட்டிகளில் பதக்கங்கள் பெறத் தொடங்கினேன்... ஆனால் என் பேரன் இன்பன் 5 வயதாகும் முன்னரே பதக்கம் பெற தொடங்கிவிட்டான்...." என்று பூரித்து பதிவிட்டிருந்தார். இங்கே இன்னொரு சம்பவத்தையும் நினைவூட்ட வேண்டி உள்ளது.. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் களத்தில் இறங்கி தீவிரமான பணியை மேற்கொண்டிருந்தது.. அப்போது, மா.சுப்பிரமணியன் நேரடியாகவே மாவட்டங்களில் ஆய்வு சென்றிருந்தார்.. இந்த ஆய்வுகளில் சில ரிஸ்க்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.

மூக்கன்கரை
அதில் ஒன்றுதான், கிருஷ்ணகிரி பெட்ட முகிலாலம் ஊராட்சியாகும்.. இதற்காக, இங்குள்ள கோட்டையூர் கொல்லை என்ற மலை கிராம ஊராட்சி நடுநிலை பள்ளியில் இரவு தங்கி, மறுநாள், கொடகரை, காமகிரி, மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தார்... அதற்கு பிறகு, கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மூக்கன்கரை மலைக்கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார்.. ஆனால், இந்த மூக்கன்கரை மலைக்கிராமமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. இந்த கிராமத்துக்கு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்ல வேண்டும்..

குச்சியுடன் ஜாக்கிங்
பாதையும் சரியாக இல்லை.. அதனால் கையில் ஒரு கம்புடன் அமைச்சர் வனப்பகுதிக்குள் நடந்தார். அந்த மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மூக்கன்கரை மலைப்பகுதியானது யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியாம்.. அதனால், காட்டுக்குள் நுழையும்போதே, கையில் ஒரு பெரிய குச்சியுடன்தான் சென்றார்.. இதுவரை மலை கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் கூட யாரும் வந்து போகாத நிலையில், திடீரென சுகாதாரத்துறை அமைச்சரை பார்த்ததும் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டனர்..

யூனிபார்ம்
ஆசனூர், தாளவாடி மலைப்பகுதியில்கூட, ஜாக்கிங் செய்வதை அமைச்சர் நிறுத்தவில்லை என்பதுதான் ஹைலைட்டே.. ஆசனூர் பகுதியில், புலி சிறுத்தை போன்றவை நடமாடி கொண்டே இருக்குமாம். அதனால், பாதுகாப்பு கருதி, துப்பாக்கிய ஏந்திய அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளும் அமைச்சருடன் துப்பாக்கியுடனேயே ஜாக்கிங் செய்த வீடியோக்களும் அப்போது வெளியாகி இருந்தன.. சுப்பிரமணி, ரெட் கலர் டி-ஷர்ட்டில் ஜாக்கிங் செய்ய, வனத்துறை அதிகாரிகள், யூனிபார்மிலேயே பின்னால் ஜாக்கிங் செய்த அந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியது.

முத்திரை
இப்போது விஷயம் என்னவென்றால், ஜப்பான் போயிகூட, சுப்பிரமணி ஜாக்கிங்கை விடலையாம்.. கடந்த 5 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அறிந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்.. டோக்கியோவில் 6 டிகிரி செல்சியஸ் குளிரில் ஜாக்கிங் ஓடிக் கொண்டிருக்கிறார்.. இந்த வீடியோவையும் சுப்பிரமணி, ஷேர் செய்துள்ளார்.. ரெட் கலர் டி-ஷர்ட் - பிளாக் கலர் பேண்ட் அதாவது "முத்திரை"யுடன் கலக்கலாக காணப்படுகிறார். பொதுவாக, ஒரு அரசியல்வாதிகள், தங்கள் உடற்பயிற்சியில் இவ்வளவு கவனம் செலுத்தாத நிலையில், எப்போதுமே ஒரு ஆகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார் நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications