Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.. கூடுதலாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2,25,400 ஆசிரியர்களும், 52,75,203 மாணவர்களும் பயின்று வருகின்றனர். மாநில அரசு, அரசு பள்ளிகளை பாதுகாக்க தொடர்ந்து பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகள் அளவிற்கு உயர்த்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

Extension of 3 months for additional 3000 teachers appointed in Tamil Nadu government schools

இந்த திட்டங்கள் மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்த்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கணிசமான அளவில் அதிகரித்து வந்தது. இதற்கு கொரோனா தொற்றும் மிகப்பெரிய காரணமாக இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் ஏரளாமான தொழில்கள் முடங்கின. எனவே தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து படிக்க வைக்க முடியாமல் பெற்றோர் திணறினர். எனவே அரசு பள்ளிகளை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். இதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல கடந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களின் பணிக்காலம் 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2023ம் ஆண்டு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

Extension of 3 months for additional 3000 teachers appointed in Tamil Nadu government schools

இவர்களின் பணிக்காலம் நேற்றுடன் (மே.17) முடிவடைந்தது. இருப்பினும் இவர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்வதாக பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான சரியான ஊதியமும் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விரைவு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இவ்வாறு நியமிக்கப்படுவது வரவேற்கதக்கது என்றும், இருப்பினும் தங்களுக்கு அரசு பணி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அல்லது அரசு பணிகளில் முயற்சிக்கும்போது இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+