Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிந்தால் தீபாவளி.. சத்யராஜ்ஜின் மகள், திவ்யா சொல்றதை கேட்டீங்களா? அந்த நேரத்தில் கோழிக்கறி வேணாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் நாளைய தினம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல நடிகர் சத்யராஜ் மகள், டாக்டர் திவ்யா சத்யராஜ் முக்கிய அட்வைஸ் ஒன்றினை தந்துள்ளர்.

நாளைய தினம் தீபாவளி பண்டிகை, தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இதனால், பொது இடங்கள் மற்றும் கடைத்தெருக்களில், மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.. மற்றொருபக்கம் சொந்த ஊர்களுக்கும் பொதுமக்கள் பயணமாகி வருகிறார்கள்.

Famous Actor Sathyaraj Daughter Dr Divya Sathyaraj Supertips and What can be done to prevent allergies

விதிமுறைகள்: இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, நாளை தீபாவளியன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்.. தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.. பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்: அதேபோல, விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 102 காவல் நிலையங்களிலும், எஸ்.ஐ. தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை சென்னை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து, பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான டாக்டர் திவ்யா சத்யராஜ் சில முக்கிய அறிவுரைகளை தெரிவித்துள்ளார். மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அவைகளிலிருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் திவ்யா, ஒரு சேனலுக்கு விலாவரியாக பேட்டி தந்துள்ளார்.

கோழிக்கறி: அதில் டாக்டர் திவ்யா சொல்லும்போது, "பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். குறிப்பாக, இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம். இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். பியூட்டி பார்லர்களக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சம்பழம்: வழக்கமாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அது தவறு... எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரிவதுடன், அரிப்பையும் ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று எலுமிச்சையை நாம் கருதக்கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கும்.. மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும்.

கண்ணாடி: பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என்று டாக்டர் திவ்யா அறிவுறுத்தியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+