ஜொலி ஜொலிக்கும் சாதாரண வந்தே பாரத்.. ஏசி இல்லாத 22 பெட்டி.. வந்தே சதரன் ரயில் எப்படி இருக்கு பாருங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து, வந்தே சதரன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரப்போகின்றன.. இந்த ரயில்களை அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.. இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

சாதாரண் வந்தே பாரத்: ஏற்கனவே உள்ள வந்தே பாரத் ரயிலிலேயே ஒருசில மாற்றங்களை செய்து, இந்த ரயில் தயாராகிறது. அந்தவகையில், இந்த ரயிலில் ஏசி வசதி கிடையாது.. சாதாரண பெட்டிகள்தான் இருக்கம்.. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது இந்த வந்தே சதரன் ரெயில்கள்.. இவைகளை நாடு முழுவதும் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரிசர்வேஷன்: அதாவது, ரிசர்வேஷன் இல்லாத 8 பெட்டிகள் உள்பட22 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே சதரன் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன... பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன உள்ளன..
இந்நிலையில், ரெயில்வே அதிகாரிகள் இன்று ஐசிஎப் ஆலையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டனர்.. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் வசதிகள்: இந்த ரயிலிலுள்ள கூடுதல் ஸ்பெஷல் வசதிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. வந்தே சதரன் ரெயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும்.. படுக்கை வசதிகளுடன் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன..
ஒவ்வொரு சீட்டிற்கும் செல்போன் சார்ஜர் வசதி உண்டு.. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இருக்கிறதாம்.
கப்ளர்கள்: எல்எச்பி பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார என்ஜின் கொண்டு இயங்கும். எந்த ஒரு நிலையிலும் ரயிலை பின்னோக்கி இயக்க தேவையில்லை. 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பதால், இந்த ரயிலின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications