சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்
சென்னை: கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை கோட்டூரில் உள்ள அரூரான், மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளின் உரிமையாளரின் வீட்டின் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நான்கு இடங்களில் அரூவா மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளின் உரிமையாளர் ராம் தியாகராஜனின் வீடு சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது.

கரும்பு நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து இன்று அவரது வீட்டின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கூடினர். திடீரென அங்கு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி முதல், 26 மாதங்களில் 10 ஆயிரம் விவசாயிகள், 14லட்சம் டன் கரும்பை, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி உள்ளனர். அந்த வகையில் 420 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வர வேண்டி உள்ளது. கட்டிங் ஆர்டரை பெறும் போது விவசாயிகளிடம் பெற்ற கையெழுத்தை பயன்படுத்தி, 5830 விவசாயிகள் பெயரில், 200கோடி அளவுக்கு கடன் வாங்கி பெறப்பட்டுள்ளது" என்றார்
இந்நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்தால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று போலீசார் கைது செய்ததால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications