சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்
சென்னை: கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை கோட்டூரில் உள்ள அரூரான், மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளின் உரிமையாளரின் வீட்டின் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நான்கு இடங்களில் அரூவா மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளின் உரிமையாளர் ராம் தியாகராஜனின் வீடு சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது.

கரும்பு நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து இன்று அவரது வீட்டின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கூடினர். திடீரென அங்கு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி முதல், 26 மாதங்களில் 10 ஆயிரம் விவசாயிகள், 14லட்சம் டன் கரும்பை, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி உள்ளனர். அந்த வகையில் 420 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வர வேண்டி உள்ளது. கட்டிங் ஆர்டரை பெறும் போது விவசாயிகளிடம் பெற்ற கையெழுத்தை பயன்படுத்தி, 5830 விவசாயிகள் பெயரில், 200கோடி அளவுக்கு கடன் வாங்கி பெறப்பட்டுள்ளது" என்றார்
இந்நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்தால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று போலீசார் கைது செய்ததால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications