தந்தையர் தினம் 2020 : உங்கள் அப்பாவின் பெருமைகளை எங்களுக்கும் சொல்லுங்கள்
சென்னை: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... தந்தையின் அன்பின் முன்னே.. இது பாடல் வரி மட்டும் இல்லை... .நிதர்சனமும் கூட.
அம்மாக்களின் கதைகளை நிறையவே கேட்டிருக்கிறோம். வாழும் சாமிதான் அம்மா.. ஆனால் நாம் நல்லா வாழ வேண்டும் என்பதற்காக அனுதினமும் தன்னை வருத்திக் கொள்ளும் அப்பாக்களையும் நாம் கொண்டாட வேண்டும் இல்லையா.. அதற்காகவே ஆண்டுதோறும் அன்னையர் தினம் போலவே தந்தையர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஆண்டு இது தேதி மாறி வருகிறது.. இந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா, லாக்டவுன் என உலகமே மாறிப் போய்க் கிடக்கிறது.. ஆனால் என்றும் மாறாத, எப்போதும் மாறாத அன்பு அப்பாக்களின் அன்புதான்.
அப்பா கிட்ட வாங்கிய அடிதான் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த அடிகளுக்குப் பின் அப்பாக்கள் நம்மை செம்மைப்படுத்த எடுத்துக் கொண்ட சிரத்தையும், அக்கறையும் கூடவே மறைந்திருப்பது பலர் மறந்து விடுவார்கள். ஆனால் வளர்ந்து பெரிய ஆளான பிறகு அப்பாவைப் பற்றி நினைக்கா, வருந்தாத, நன்றி சொல்லாத பிள்ளைகளே இருக்க முடியாது. அதுதான் அப்பா.
சீன அடாவடிக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வாசகர்களே உங்க கருத்து என்ன
அம்மாக்கள் அன்பு நம்மை நல் வழிப்படுத்துகிறது என்றால்.. அப்பாக்கள் காட்டும் அன்பு நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட உதவும். அப்பாக்களுக்குள்ளும் தாய்மை உண்டு.. என்ன, அதைப் புரிந்து கொள்ள நாம் நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு விடுகிறோம். உங்களுக்கும் உங்களது அப்பா குறித்த நினைவுகள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள் நிறையவே இருக்கும்.. அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்.. எல்லோரும் சேரந்து அவரை வணங்குவோம், வாழ்த்துவோம்.
கவிதையாக, கட்டுரையாக, நெகிழ்ச்சி உரையாக, வீடியோவாக எப்படி வேண்டுமானாலும் எங்களுக்கு அனுப்பலாம். காத்திருக்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]