இதுதான் ரொம்ப முக்கியம்! கல்வித்துறைக்கு கொட்டிக்கொடுத்த பிடிஆர்.. கடந்த முறையை விட அதிகம்.. சிறப்பு
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் 3வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும் இது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டு வருகிறார்,

பட்ஜெட்
அவர் தனது அறிவிப்பில், நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

கல்வித்துறை
குடிமை நடப்பாண்டை போலவே அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும்.

மாணவர் சேர்க்கை
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்., 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ. 1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மேம்பாட்டுக்கு ரூ40 கோடி செலவு செய்யப்படும். ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

திறன்
வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும். காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக 1547 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது 500 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர். 2.2 லட்சம் மாணவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி திட்டத்துக்கு ரூ.50கோடி. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒதுக்கீடு
ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த முறை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications