சென்னை எல்ஐசி 15வது மாடியில் பற்றி எரிந்த பெயர் பலகை.. தீ அணைக்க உதவிய ஏரியல் வெய்கிள்! அப்படினா?
சென்னை: சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் பதான் இன்று மாலை திடீரென்று எல்ஐசி கட்டத்தின் மேல் மாடியில் பெயர் பலகை தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பிளாட்பார்ம் ஏரியல் வாகனத்தை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை அண்ணாசாலையின் பழம்பெருமை வாய்ந்த எல்ஐசி கட்டடம் உள்ளது. சென்னையின் அடையாளமாக உள்ள கட்டடம் 15 மாடிகளை கொண்டது. இந்த கட்டடம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை நகரில் இன்றும் கூட அண்ணாசாலையின் அடையாளமாக இந்த எல்ஐசி கட்டம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த கட்டத்தின் மேல்புறம் எல்ஐசி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

15வது மாடியில் பற்றி எரிந்த தீ
இந்நிலையில் தான் இன்று மாலை திடீரென்று மேல்மாடியில் வைக்கப்பட்டு இருந்த எல்ஐசி பெயர் பலகை தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் நவீன தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு போராடி தீயை அணைத்தனர். வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் மூலம் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை.

ஏரியல் பிளாட்பார்ம் வாகனம்
இந்நிலையில் தான் எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினருக்கு வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் வேகமாக கைக்கொடுத்தது. அதாவது சாதாரண கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதனை சாதாரண தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து விடலாம். ஆனால் பெரிய பெரிய உயரமான கட்டடங்களில் தீவிப்து ஏற்பட்டால் அதனை அணைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகுந்த சவால் மிக்கது.

நீளமான ஏணியுடன்..
துரிதமாக சரியான திட்டமிடலும் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பெரிய பெரிய கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும். இதற்கு பெரும்பாலும் தீயணைப்பு வீரர்களுக்கு ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் தான் கைக்கொடுக்கும். இந்த ஏரியல் பிளாட்பார்ம் வாகனத்தை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். அதாவது தீயணைப்புக்கு தேவையான கருவிகளுடன் நீளமான ஏணியை இந்த வாகனம் கொண்டிருக்கும்.

2 முதல் 3 வீரர்கள் செல்லலாம்
இந்த ஏணியின் ஒருபுறம் வாகனத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு முனையில் தீஅணைப்புக்கான பொருட்களும், 2 முதல் 3 தீயணைப்பு வீரர்கள் நிற்கும் வகையில் பிளாட்பார்ம் போன்ற அமைப்பு இருக்கும். உயரமான கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் இந்த வாகனத்தின் ஏணியை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீவிபத்து ஏற்பட்ட தளத்துக்கு செல்ல முடியும். அதோடு தீதடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி உடனே தீயை அணைப்பார்கள். இந்த வாகனம் தான் தற்போது சென்னை எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பெரிதும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications