சென்னை எல்ஐசி 15வது மாடியில் பற்றி எரிந்த பெயர் பலகை.. தீ அணைக்க உதவிய ஏரியல் வெய்கிள்! அப்படினா?
சென்னை: சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் பதான் இன்று மாலை திடீரென்று எல்ஐசி கட்டத்தின் மேல் மாடியில் பெயர் பலகை தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பிளாட்பார்ம் ஏரியல் வாகனத்தை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை அண்ணாசாலையின் பழம்பெருமை வாய்ந்த எல்ஐசி கட்டடம் உள்ளது. சென்னையின் அடையாளமாக உள்ள கட்டடம் 15 மாடிகளை கொண்டது. இந்த கட்டடம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை நகரில் இன்றும் கூட அண்ணாசாலையின் அடையாளமாக இந்த எல்ஐசி கட்டம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த கட்டத்தின் மேல்புறம் எல்ஐசி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

15வது மாடியில் பற்றி எரிந்த தீ
இந்நிலையில் தான் இன்று மாலை திடீரென்று மேல்மாடியில் வைக்கப்பட்டு இருந்த எல்ஐசி பெயர் பலகை தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் நவீன தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு போராடி தீயை அணைத்தனர். வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் மூலம் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை.

ஏரியல் பிளாட்பார்ம் வாகனம்
இந்நிலையில் தான் எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினருக்கு வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் வேகமாக கைக்கொடுத்தது. அதாவது சாதாரண கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதனை சாதாரண தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து விடலாம். ஆனால் பெரிய பெரிய உயரமான கட்டடங்களில் தீவிப்து ஏற்பட்டால் அதனை அணைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகுந்த சவால் மிக்கது.

நீளமான ஏணியுடன்..
துரிதமாக சரியான திட்டமிடலும் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பெரிய பெரிய கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும். இதற்கு பெரும்பாலும் தீயணைப்பு வீரர்களுக்கு ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் தான் கைக்கொடுக்கும். இந்த ஏரியல் பிளாட்பார்ம் வாகனத்தை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். அதாவது தீயணைப்புக்கு தேவையான கருவிகளுடன் நீளமான ஏணியை இந்த வாகனம் கொண்டிருக்கும்.

2 முதல் 3 வீரர்கள் செல்லலாம்
இந்த ஏணியின் ஒருபுறம் வாகனத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு முனையில் தீஅணைப்புக்கான பொருட்களும், 2 முதல் 3 தீயணைப்பு வீரர்கள் நிற்கும் வகையில் பிளாட்பார்ம் போன்ற அமைப்பு இருக்கும். உயரமான கட்டங்களில் தீவிபத்து ஏற்பட்டால் இந்த வாகனத்தின் ஏணியை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீவிபத்து ஏற்பட்ட தளத்துக்கு செல்ல முடியும். அதோடு தீதடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி உடனே தீயை அணைப்பார்கள். இந்த வாகனம் தான் தற்போது சென்னை எல்ஐசி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பெரிதும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சென்னை டூ நெல்லைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்கள்! கோடை லீவுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications