பாஜக போட்ட வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட அமுதா ஐஏஎஸ் உள்பட 5 அதிகாரிகள்
சென்னை: பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை அப்புறப்படுத்த கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்தப் பள்ளியை அப்புறப்படுத்தி அந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். என்றும், பள்ளிக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக பாஜகவின் ஆன்மீக கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர்.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, "புவனகிரி தாலுகா பெரியபட்டு கிராமத்தில் அந்த பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். ஆனால் அந்த பள்ளி தரப்பில், "32 கிலோ ட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் சாலை வசதி ஏதும் இல்லை. ஆகையால், கடலூர் நகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் ரவீந்திரன், பிரதான சாலையில் இருந்து குறிப்பிட்ட அந்த நிலத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து புதிய இடத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்க கோரி அரசுக்கு விண்ணப்பம் கொடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications