Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2000 வெள்ள நிவாரணம் டோக்கன் விநியோகம் தொடங்கியது.. 4 நாட்களுக்குள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது, டோக்கன் வழங்கப்பட்ட 3 முதல் 4 நாட்களில் நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30 ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழைநீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

villupuram cyclone fengal ration shops

கனமழை காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபெஞ்சல் புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக ஓரிரு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் நிவாரண தொகை முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+