மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில்.. ஏபிவிபி முன்னாள் நிர்வாகி டாக்டர் சுப்பையா கைது
சென்னை: மூதாட்டியின் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி எனப்படும் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பிரச்சியனானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக அப்போதே ஏபிவிபி அமைப்பின் முன்னாள் நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது ஆதம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பார்கிங் தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிக்கும் மருத்துவர் சுப்பையாவுக்கும் மூதாட்டிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போதிலும் டாக்டர் சுப்பையா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவர் சுப்பையாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி சிறையில் இருந்த ஏபிவிபி நிர்வாகிகளைச் சந்தித்த விவகாரத்தில் சமீபத்தில் தான் இந்த டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications