இவ்ளோ பேசியும்.. பதவி கிடைக்காமல் பரிதவிப்பு - ஓரம்கட்டப்படுகிறாரா அதிமுக முன்னாள் “மெயின்” அமைச்சர்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்றாதது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Recommended Video
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

துணை பொதுச்செயலாளர்கள்
இதனை தொடர்ந்து அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள துணை பொதுச்செயலாளர்களுக்கான பதவிகளை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அமைப்பு செயலாளர்கள்
பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மயுத்த காலத்திலிருந்து எப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையே மோதல் வெடிக்கிறதோ அப்போதெல்லாம் ஜெயக்குமார் அழுத்தமாக எடப்பாடிக்கு ஆதரவாக அழுத்தமான கருத்தை முன்வைப்பவர் ஜெயக்குமார். சமீபத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானபோது கூட ஜெயக்குமார்தான் முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வெளிப்படையாக பேசியவர்.

ஏமாற்றம்
நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜெயக்குமாரிடம் எடப்பாடி தரப்பு, சமாதானம் செய்து சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பு வழங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைந்தவுடன் தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு இன்று வெளியான நிர்வாகிகள் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பட்டினப்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications