விழுப்புரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ த.கிருஷ்ணன் காலமானார்
சென்னை: விழுப்புரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் த.கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், 1977ல் விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழுப்புரம் அய்யனார்குளம் வீதி நாலாயிரம் தெருவில் வசித்த இவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடல் நாளை விழுப்புரத்தில் நல்லடக்கம் செய்யவுள்ளது.
ஆரம்ப காலத்தில், கிருஷ்ணன், சோடா கடை நடத்தியவர் என்பதால் இவரை சோடா கிருஷ்ணன் என்று அழைக்கும் பெயர் அந்த ஊரில் பிரசித்தியானது.
கிருஷ்ணனுக்கு மனையும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications