எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தியில் வெளியேறிய ஓபிஎஸ்!
சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் மல்லுக்கட்டு
இதையடுத்து அதிமுக சட்டசபை குழுத் தலைவர் அதாவது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை தீர்மானிக்க முடியாமல் அதிமுக அல்லாடியது. அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பெரும் போராட்டத்தை நடத்தினர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மீண்டும் கூட்டப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில் அதிமுகவின் 65 எம்.எல்.ஏக்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

யாருக்கு ஆதரவு அதிகம்?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றது அவரது தரப்பு. ஆனால் வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள்... எங்களுக்குதான் அதிக ஆதரவு உள்ளது என சொன்னது ஓபிஎஸ் தரப்பு. இந்த நிலையில்தான் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

இன்றும் மோதல்- எடப்பாடி தேர்வு
இன்றைய கூட்டத்திலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே 3 மணிநேரமாக கூட்டம் நீடித்தது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அதிருப்தியில் வெளியேறினார்
இதில் கடுப்பாகிப் போன ஓபிஎஸ், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தராததால் அவரது ஆதரவாளர்கள் குமுறலுடன் உள்ளனர். இதனால் மீண்டும் ஒரு பிளவை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications