எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தியில் வெளியேறிய ஓபிஎஸ்!
சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் மல்லுக்கட்டு
இதையடுத்து அதிமுக சட்டசபை குழுத் தலைவர் அதாவது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை தீர்மானிக்க முடியாமல் அதிமுக அல்லாடியது. அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பெரும் போராட்டத்தை நடத்தினர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மீண்டும் கூட்டப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில் அதிமுகவின் 65 எம்.எல்.ஏக்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

யாருக்கு ஆதரவு அதிகம்?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றது அவரது தரப்பு. ஆனால் வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள்... எங்களுக்குதான் அதிக ஆதரவு உள்ளது என சொன்னது ஓபிஎஸ் தரப்பு. இந்த நிலையில்தான் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

இன்றும் மோதல்- எடப்பாடி தேர்வு
இன்றைய கூட்டத்திலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே 3 மணிநேரமாக கூட்டம் நீடித்தது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அதிருப்தியில் வெளியேறினார்
இதில் கடுப்பாகிப் போன ஓபிஎஸ், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தராததால் அவரது ஆதரவாளர்கள் குமுறலுடன் உள்ளனர். இதனால் மீண்டும் ஒரு பிளவை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications