திருப்பூர் தெற்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.டி. தங்கவேல் கொரோனாவிற்கு மரணம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.டி.தங்கவேல் கொரோனாவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69. கேடி தங்கவேலுவிற்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கே.டி தங்கவேலு கடந்த 2011-2016 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கே.டி. தங்கவேல். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 2.24 மணியளவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த கே.டி தங்கவேல் இறுதிச் சடங்கு திருப்பூர் ஆத்துப்பாளையம் ரோடு மின் மயானத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான, திருப்பூர் அவிநாசி ரோடு தியாகி பழனிச்சாமி நிலையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications