காலையிலேயே ஷாக்.. சென்னை புறநகரில் ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக பலி.. என்ன நடந்தது!
சென்னை: சென்னை புறநகரில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாகச் சென்னையில் பஸ், ரயில், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்தும் சிறப்பாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் போக்குவரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் சாய்ஸ் என்றால் அது ரயில்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
விபத்து: அதேநேரம் ரயில் நிலையத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அங்கே கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மோசமான விபத்துக்கள் ஏற்படும். அப்படியொரு மோசமான விபத்து சென்னை புறநகர்ப் பகுதியான பொன்னேரியில் நடந்துள்ளது.
சென்னை புறநகர்: சென்னையில் தாம்பரத்தை அடுத்து இருக்கும் பொன்னேரியில் இன்று காலை 4 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். காலை நேரம் என்பதால் ரயில் அருகே வந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தண்டவாளத்தைக் கடக்கும் முன்பே ரயில் அவர்கள் மீது மோதி உள்ளது. இதன் காரணமாக அந்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரயிலைக் கடக்க முயன்று உயிரிழந்தோர் சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு பிரணவ் (23), சதீஷ் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த இந்த தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அங்கே பெயிண்டிங் வேலை முடிந்த நிலையில், 4 பேரும் சொந்த ஊருக்குச் செல்லவிருந்தனர்.
என்ன நடந்தது: இதற்காக அவர்கள் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தனர். அப்போது தான் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிலையில், நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கி உள்ளனர்.
தண்டவாளங்களைக் கடப்பது ரொம்பவே ஆபத்தானது என்பதால் தண்டவாளங்களைக் கடக்கக்கூடாது என்றே ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருந்த போதிலும் சிலர் அந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், பாவம் இது அவர்கள் உயிரையே பறித்தும் விடுகிறது.












Click it and Unblock the Notifications