மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.. சென்னை ஆட்சியர் முன்னிலையில் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், புத்தாண்டிற்கு முன்பு கூட மெரினா உட்பட முக்கிய கடற்கரைகளில் அருகே சென்று மாற்றுத்திறனாளி கடலை ரசிக்கும் வகையில் தற்காலிக பாதை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் ரூ 35.19 மதிப்பிலான ஸ்கூட்டர்கள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 46 பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறுகையில், சென்னையை பெறுத்தவரை, கொரோனா தொற்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே, கோவில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை. கோவில் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிய நில அளவையாளர்கள், 150 பேர் மற்றும் 36 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் மற்ற இடங்களில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications