Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதம் பிடித்த யானை.. சென்னையை நோக்கி வரும் கஜா புயல்.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தற்போது புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கஜா புயல் இன்னும் 2 நாட்களில் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும்.

[பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடவிடம் திமுக கேட்காதது ஏன்- முதல்வர் கேள்வி]

 புயல் பெயர்

புயல் பெயர்

இந்திய பெருங்கடலில் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கும் 2000ல் தொடங்கியது. ஆனால் இது முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 2004ல்தான். புயல் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும் அதற்கு பெயர் வைக்கப்படும். இந்த பெயர்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும்.

 எந்த நாடுகள்

எந்த நாடுகள்

இந்திய பெருங்கடல் பகுதிகளை சுற்றி ஏற்படும் புயலுக்கு சில நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, ஓமான், பாகிஸ்தான் , மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். இந்த முறை தமிழகத்தில் ஏற்படும் புயலுக்கு கஜா என்று தாய்லாந்துதான் பெயர் வைத்தது.

 எப்படி தேர்வு

எப்படி தேர்வு

இந்த பெயர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும். அடுத்த புயல் ஏற்படும் போது, இந்த நாடு வைத்த பெயர் பயன்படுத்தப்படும் என்று ஒரு வரிசைப்படி இந்த பெயர் வைக்கும் செயல் நடந்து வருகிறது. உதாரணமாக வர்தா புயல் பாகிஸ்தான் வைத்த பெயர் அதன்பின் மருதா என்ற புயலுக்கு தாய்லாந்து வைத்த பெயரும், மோரா என்ற புயலுக்கு இலங்கை வைத்த பெயரும் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் வங்கதேசம் வைத்த ஓகி என்ற புயல் வந்தது. தற்போது தாய்லாந்து வைத்த கஜா என்ற புயல் வந்துள்ளது. இன்னும் இரண்டு புயலுக்கு பின் மூன்றாவது புயலுக்கு இந்தியா வைத்த பெயரான வாயு என்று பெயர் பயன்படுத்தப்படும்.

 என்ன சிறப்பு

என்ன சிறப்பு

தற்போது தமிழகத்தை தாக்க உள்ள புயலுக்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துதான் இந்த பெயரை வைத்தது. கஜா என்றால் யானை என்று பொருள். சரியாக இந்த மதம் பிடித்த யானை தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+