பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன்-முதல்வர் கேள்வி
சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் 64 வயது வரை கமல்ஹாசன் நடித்துவிட்டார். அதாவது 40 ஆண்டுகாலம் நடித்துவிட்டார். தற்போது மக்கள் அவருக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறார்கள்.
ஆனால் கமலோ தற்போது அரசியல் நாடகம் நடத்துகிறார். விஸ்வரூபம் பிரச்சினைக்கு நாட்டை விட்டே போகிறேன் என்றார். இவர் மக்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை கண்டுவிடுவார்.

டிடிவி தினகரன்
40 ஆண்டுகள் நடித்த கமலை மக்கள் ஏற்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன்தான் உண்மையில் துரோகி.
[கல்வியும் இலவசமாக கொடுக்கிறோம்.. அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா?- முதல்வர் எடப்பாடி கேள்வி ]

தெரியவில்லையா
திமுக தலைவர் ஸ்டாலின் பச்சோந்திபோல் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக, தீண்டத்தகாத கட்சியாக தெரியவில்லையா?

மக்கள் நலன் இல்லை
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுகவினர் ஏன் எதுவும் கேட்கவில்லை? பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது. தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீரை கொடுங்கள் என ஏன் திமுகவினர் கேட்கவில்லை? அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே நினைக்கிறார்கள்; மக்கள் நலனில் அக்கறை இல்லை.

தயாராகவே உள்ளது
வானிலை மையம் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் மழை வரவில்லை. இருந்தாலும் மழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு தமிழக அரசு தயாராகவே இருக்கின்றது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications