Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கேம் சேஞ்சர்".. கனிமொழியா? தமிழரசியா?.. குறுக்கே வந்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினின் அல்ட்ரா பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிக்குள் இரண்டு முக்கிய தலைவர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மூன்றாவதாக ஒரு தலைவர் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் உட்கட்சி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது.

72 மாவட்டங்களில் மொத்தம் 45 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 27 மாவட்டங்களில் பலர் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் பல இடங்களில் போட்டி வாபஸ் பெறப்பட்டு போட்டியின்றி மாவட்ட செயலாளர்கள் தேர்வானார்கள்.

இந்த நிலையில்தான் கட்சியில் காலியாக உள்ள ஒரு துணை பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

துணை பொதுச்செயலாளர்

துணை பொதுச்செயலாளர்

ஆக்டிவ் அரசியலில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி இருக்கிறார். திமுகவில் இருந்து விலகியவர், மொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து உள்ளார். அவர் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரின் விலகல் காரணமாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை நிரப்புவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திமுக எம்பி கனிமொழியை இந்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.

மகளிரணி

மகளிரணி

மகளிரணிக்கு புதிய செயலாளரை நியமனம் செய்துவிட்டு கனிமொழிக்கு இந்த முக்கியமாக பொறுப்பை கொடுக்கலாம். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு அரசியல் கிசு கிசுக்கள் வெளியாகின. கனிமொழி கட்சியில் இன்னும் பெரிய பொறுப்புகளை பெறலாம். மகளிரணியை விட பெரிய பொறுப்புகளை அவருக்கு வழங்கலாம். அதனால் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் வந்தன. கனிமொழிக்கு பெண்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தென் மண்டலம்

தென் மண்டலம்

தென் மண்டலத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கனிமொழி துணை பொதுச்செயலாளர் ஆனால் அது திமுகவிற்கு பலம் சேர்க்கும். இது போக பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான இன்னொரு நபர் என்று கூறப்படுபவர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் திமுகவின் முகமாக இருக்கிறார். கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக வெற்றிபெற செந்தில் பாலாஜிதான் காரணம். கரூரிலும் செந்தில் பாலாஜி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.

 சேலம்

சேலம்

பாஜக, அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாகவே செந்தில் பாலாஜிக்கு முக்கியமான பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. அவருக்காக திமுகவில் சிறப்பு பதவி உருவாக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அவர் மேலும் வலிமை அடைவார். திமுகவிற்கு அவர் கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக இருப்பார்.

கொங்கு

கொங்கு

மூன்றாவதாக இதில் நுழைந்து இருக்குஇம் நபர் தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தாய் சேர்ந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இந்த போட்டி லிஸ்டில் இணைந்து உள்ளார். தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை எப்படியாவது அள்ள வேண்டும் என்று பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் முயன்று வருகின்றன. பிரதமர் மோடியே தன்னை நான் நரேந்திரர்.. நீங்கள் தேவேந்திரர் என்று அழைக்க இது முக்கியமான காரணமாக இருந்தது.

திமுக

திமுக

திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக இவர்களின் வாக்குகள் உள்ளன. தேவேந்திரர் குல வேளாளர் கவரவே சமீத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தின் போது உதயநிதி ஸ்டாலின் தென் மண்டலத்திற்கு சென்றார். இந்த நிலையில்தான் தமிழரசியை துணை பொதுச்செயலாளர் ஆக்கினால் அது மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும். இந்த நிலையில்தான் ஸ்டாலின் டிக் அடிக்க போகும் அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+