Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் மகன் பற்றி பிரதமரை பார்த்து புகார் சொல்வேன்! அசராத காயத்ரி தேவி! பின்னணியில் இருப்பது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது, டிஜிபியை நேரில் சந்தித்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த காயத்ரி தேவி என்ற பெண், சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரதமரை நேரில் சந்தித்து புகார் சொல்வேன் எனக் கூறியிருக்கிறார்.

பிரதமர் என்றால் யார், அவருக்கு அன்றாடம் இருக்கும் பணிகள் என்ன, பிரதமரின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் இருக்கும் வேல்யூ என்ன என்பதை காயத்ரி தேவி தெரிந்து சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் எடுத்த எடுப்பிலேயே நான் பிரதமரை பார்ப்பேன் என சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் ஆவேசம் காட்டியிருக்கிறார்.

Gayathri Devi said that she will complain to the Prime Minister about OPS son

தமிழக டிஜிபியிடம் புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை, நான் பிரதமரை சந்திப்பேன் என காயத்ரி தேவி எடுத்த எடுப்பிலேயே கூறியிருப்பது பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பியது. உங்கள் பின்னால் நிற்கிறவர்கள் எல்லாம் யார் என செய்தியாளர்கள் வினவினர்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனது பின்னணியில் யாரும் கிடையாது என பதிலளித்த காயத்ரி தேவி, நான் தனி நபராக தான் இந்த வழக்கை எதிர்கொள்ளப் போகிறேன் என்றும் நான் எனது வழக்கறிஞரை மட்டும் தான் அழைத்து வந்தேன், அவருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் எனவும் காயத்ரி தேவி விளக்கம் அளித்தார்.

இதனிடையே நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மருமகளும், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பியின் மனைவியுமான ஆனந்தி தன்னை அலைபேசி மூலம் அழைத்ததாகவும், அப்போது என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்னிடம் கூறியிருக்கலாமே எனக் கேட்டதாகவும் அதற்கு உங்களிடமும், ஓபிஎஸ்ஸிடமும் சொல்லி எந்த பயனும் இல்லாததால் காவல்துறையில் புகார் அளித்தேன் எனக் கூறியதாகவும் காயத்ரி தேவி கூறினார்.

ரவீந்திரநாத் எம்.பி. மீதான பாலியல் தொல்லை குறித்த புகார் மீது தமிழக காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறிய காயத்ரி தேவி, கடந்த வாரம் வரை தனக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ரவீந்திரநாத் எம்பி தன்னை வாட்ஸ் அப் காலில் அழைத்து தன்னிடம் ஆபாசமாக பேசினார் என்பதும் திருமணம் செய்துகொள்வதாக கூறி தகாத முறையில் பேசினார் என்பதும், வீடியோ காலில் வரச்சொல்லி நள்ளிரவை கடந்தும் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு அளித்தார் என்பதும் காயத்ரி தேவியின் பிரதான புகாராகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+