சிறு, குறு தொழிலதிபர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி விலக்கு?
சென்னை: ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகம் கொண்ட நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில், இன்று, அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழகத்தில் நவீன உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 1991-96ம் ஆண்டு காலகட்டம், 2001-06 கால கட்டத்திலும், 2011-16ம் ஆண்டு காலகட்டத்திலும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

முதலீட்டாளர்கள் 3 விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். மாநிலம் அமைதியாக உள்ளதா என்று பார்ப்பார்கள். தமிழகம் அமைதியாக உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவு பெற்றுள்ளதா? ஒற்றை சாளர முறையில் உடனடியாக, தொழில் துவங்க அனுமதி கிடைக்குமா என்றும் பார்ப்பார்கள். தமிழகம் அப்படியான நிலையில் உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிகம் தமிழகம் வருகிறார்கள்.
தமிழகத்தில் ஜனவரி 23, 24ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 2015ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 16533 சிறு, குறு நிறுவனங்கள் மட்டும், 10,000 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி வரியிலிருந்து சிறு குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசுதான் அதிக அழுத்தம் கொடுத்தது. இந்த அடிப்படையில்தான், வரும் ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டியில் பல சலுகைகள் கிடைக்க உள்ளன. 75 லட்சம் வரையிலான வர்த்தகம் உள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். ஜனவரி மாதம் முதல் இந்த நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications