Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி "சனிக்கிழமைகளில்" நடக்கும் மாற்றம்.. தமிழக அரசின் செம அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.

விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க போகிறது.. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடமும் டெங்கு பரவல் உள்ளது.

Good News for Tamil Nadu and Monsoon Special Medical Camp will be held on Saturdays hereafter

எனவே, இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி, தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

முகாம்கள்: அந்தவகையில், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற டிசம்பர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அதாவது 10 வாரங்கள் வாரந்தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம், 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தும் பணிகளும் கையில் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த முகாம்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத மருத்துவம் - நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இந்த நிகழ்வுக்கு பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியிருக்கிறார்..

அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரும் மத்திய அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நீட் விலக்கு குறித்தான அவசியம் குறித்து எடுத்துரைத்து வருகிறார். தமிழகத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் இடத்திலும், நீட் விலக்கு குறித்து தமிழக முதல்வர் பேசியதுடன், அதற்குண்டான கடிதத்தினையும் தந்துள்ளார்.

மழைக்காலம்: மழைக்காலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நாளில் 1000 இடங்களில் நடத்தப்படும் என்று அறிவித்து, 2000-க்கும் மேற்பட்ட முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 29 ம் தேதியன்று மட்டும், தமிழகம் முழுவதும், 1,943 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.. இதன்மூலம் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 335 பேருக்கு காய்ச்சல், 254 பேருக்கு இருமல் மற்றும் சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, நவம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கையினை வைத்துள்ளனர்..

சனிக்கிழமை: எனவே, இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளரிடமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரிடமும் ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், மருத்துவத் துறை வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வாரங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் அமைச்சர் சுப்ரமணியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+