கனமழை.. இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக நேற்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
மேலும் இன்றும் சில மாவட்டங்களில் அதீத மழையும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்பதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில்
இதையொட்டி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு
அது போல் நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 தாலுக்காக்கள்
புதுக்கோட்டையிலும் 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுக்காகளுக்குள்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் புதுவையிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.