Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளம் சர்னு ஏறுது.. அரசு ஊழியர்களுக்கு குஷி.. அதைவிடுங்க.. பணப்பலன் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியர்கள் மிக முக்கிய வேண்டுகோள் விடுத்து, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். என்ன அது?

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது.

Government Employees Happy and Important Letter to Tamil Nadu Government from Pensioners asking for Cash Benefits

அகவிலைப்படி: அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக, சமீபத்தில் அதாவது மகா சிவராத்திரி தினத்தன்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த 4 சதவீத அகவிலைப்படி, 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதன் விளைவாக, ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதுபோல, வருகிற மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் அந்த மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்தை மார்ச் 30 அன்றே பெற இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

ஓய்வூதியர்கள்: அதுஒருபுறமிருந்தாலும், பழைய, 13வது ஊதிய ஒப்பந்தத்தின்படி, பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்... இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலருக்கு, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரேசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

"போக்குவரத்து கழகங்களில், 2016 செப்டம்பர் 1ம் தேதி முதல் 2017 ஆகஸ்ட் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என, போக்குவரத்து துறை செயலர் தரப்பில், கடந்த ஆண்டு மே 25ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அரசாணை: அரசாணை பிறப்பித்து, 10 மாதங்களாகியும் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் பணப்பலன்களை வழங்கவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில், 13வது ஊதிய ஒப்பந்தத்தின்படி கணக்கீடு செய்து பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதையடுத்தும் வழங்க மறுத்ததால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும், கடந்த மாதம் 21ம் தேதி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு: எனவே, இதில் தலையீடு செய்து அனைத்து கோட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு, 13வது ஒப்பந்தப்படி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+