Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது.. ஆளுநர் ரவி பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சைவ சித்தாந்த மாநாட்டில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மயிலாடுதுறை ஆதினம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்துலக 6-ஆவது சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

Governor RN Ravi Alleges Conspiracy to Erase Tamil Spirituality

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவருடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், துணை வேந்தர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். அதில் சமுதாய வேறுபாடு கிடையாது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும்; பக்தியின் மூலம் ஆன்மீகம் காப்பாற்றப்படுகிறது.

சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துகிறது. ஆன்மீகம் அறிவியல்பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை அழிக்க நினைக்கிறார்கள். பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது. சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை.

காஷ்மீரோ, தமிழகமோ... சைவ சித்தாந்தத்தை பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. மாநில மொழியில் இலக்கியம் வளர்த்தது சைவ சிந்தாந்தம். அதன் மூலம் எளிய மக்களுக்கும் சென்று பயன் பெற்றதது. " என ஆளுநர் ரவி சைவ சித்தாந்த மாநாட்டில் பேசி இருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சனாதனம், ஆன்மீகம் சார்ந்து பேசி வருவதால் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது. இவர்களுக்கு இடையேயான மோதல் சட்டமன்றத்திலும் வெடித்தது. திமுக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரைக் கண்டித்ததோடு, 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+