பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது.. ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: "பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சைவ சித்தாந்த மாநாட்டில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மயிலாடுதுறை ஆதினம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்துலக 6-ஆவது சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவருடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், துணை வேந்தர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். அதில் சமுதாய வேறுபாடு கிடையாது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும்; பக்தியின் மூலம் ஆன்மீகம் காப்பாற்றப்படுகிறது.
சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துகிறது. ஆன்மீகம் அறிவியல்பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை அழிக்க நினைக்கிறார்கள். பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது. சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை.
காஷ்மீரோ, தமிழகமோ... சைவ சித்தாந்தத்தை பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. மாநில மொழியில் இலக்கியம் வளர்த்தது சைவ சிந்தாந்தம். அதன் மூலம் எளிய மக்களுக்கும் சென்று பயன் பெற்றதது. " என ஆளுநர் ரவி சைவ சித்தாந்த மாநாட்டில் பேசி இருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சனாதனம், ஆன்மீகம் சார்ந்து பேசி வருவதால் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது. இவர்களுக்கு இடையேயான மோதல் சட்டமன்றத்திலும் வெடித்தது. திமுக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரைக் கண்டித்ததோடு, 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications