Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு.. காளைகளின் கொம்பில் வரப்போகும் மாற்றம்.. வீரர்கள் காயம் அடையாமல் இருக்க புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைவதை தடுக்கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொறுத்த ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழர்களின் மரபு வழி வீர விளையாட்டுக்களில் முக்கியமானது ஜல்லிக்கட்டு. ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு , ஜல்லிக்கட்டு போன்ற பெயர்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

Govt is planning to install protective shield made of rubber on bull horns in jallikattu

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதேநேரம் இந்த போட்டிகள் வணிக நோக்கத்திற்கு மாற்ற அனுமதிக்கப்படவில்லை. அப்படி அனுமதிக்கப்படாமல் பாராம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரும் புகழ் பெற்றவை ஆகும். குறப்பாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். அரசு சார்பில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15 ம் தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளததால் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்ணை குவித்து வைத்து அதில் முட்டி கொம்புகளை தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி மூலம் தயாராகி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இதனிடையே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மறு ஆய்வு மேற் செய்த இந்திய விலங்குகள் நலவாரியம், கூட்ட நெரிசல், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் களம் அவிழ்த்துவிடப்படும் நிலையில் 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும் என்றும அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளும், 950 மாடுபிடி வீரர்களும் காயமடைந்தார்கள். தமிழகம் முழுவதும் நடந்த 350 ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 8 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காயங்களை குறைக்கவும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் (ஹார்ன்புஷ்) பொருத்த தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் போட்டிகளை நடத்தும் விழா கமிட்டிகளுக்கு தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதோடு, இந்த லப்பர் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+