Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிச்சு வையுங்க.. ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு.. அரிசி அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. இனி நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களின் புகார்களை போக்கவும் உரிய அதிரடிகளை கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரிசி அட்டைதாரர்களின் சுமையை தமிழக அரசு குறைத்து வருகிறது.. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முற்றிலுமாக இன்னமும் ஒழிக்க முடியாமல் உள்ளது. குறிப்பாக, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

ration card holders ration goods ration shops

ரேஷன் அரிசி: தமிழக எல்லைகளில் இதற்கெனவே புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு, இந்த ரேஷன் பொருட்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்றவர்களால்தான், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைப்பதில்லை என்று பொதுமக்களின் புகார்கள் அதிகரித்தபடியே வருகின்றன.

இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஓரளவு ரேஷன் பொருட்களின் கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புகார்கள்: அதேபோல, ரேஷன் வாங்குவதற்கு கடைகளுக்கு சென்றாலே பாதி பொருட்கள் மட்டுமே கிடைப்பதாகவும், மீதி பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும் பணியாளர்கள் சொல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்... இதனால் சில ரேஷன் கடைகள், சண்டைக்டையாக மாறிவிடுகின்றன..

சில வணிக நிறுவனங்களுக்கு அரிசி கோதுமை, சீனி, எண்ணெய் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்களே புகார் சொல்கிறார்கள். வாங்காத பொருளுக்கும் வாங்கியதாக செல்போனில் மெசேஜ் வருகிறதாம். இதையடுத்தான், பொதுமக்கள் தமிழக அரசிடம் நேரடியாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

குறையும் கடத்தல்கள்: கடத்தலை தடுக்க மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ப்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், ரேஷனில் சில பொருட்கள் தரமற்று இருப்பதாக மீண்டும் ஆங்காங்கே புகார்கள் கிளம்பி உள்ளன. அரிசி, கோதுமையை இந்திய உணவு கழகத்திடமும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடமும், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்குகிறது.

இவைகள், கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகமும் செய்யப்படுகின்றன. சில இடங்களில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன. இதையடுத்து, இந்த புகாரையும் களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.

பிரித்து வையுங்க: அதன்படி, ரேஷன் பொருட்களின் தரத்தை, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு பொருளின் மாதிரியையும், கடைக்கு முன்பு, சிறிய பாத்திரங்களில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்று, ரேஷன் ஊழியர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளதாம்.... இப்படி தனித்தனியாக பொருட்களை பிரித்து வைத்து காட்சிப்படுத்துவதன் மூலம், அரிசி உட்பட அனைத்து பொருட்களின் தரத்தையும், கார்டுதாரர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+