கழுத்து நிறைய "நகைக்கடை".. ஹரிநாடாரை கொத்தோடு அள்ளி சென்ற போலீஸ்.. செம பரபரப்பு
திருவனந்தபுரம் அதிகாரிகள் ஹரிநாடாரிடம் விசாரணை மேற்கொண்டனர்
சென்னை: அந்த ஒருநாள் ஹரிநாடார் போலீஸ்காரர்களிடம் சிக்கி திணறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.. நடமாடும் நகைக்கடையாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்த ஹரி நாடாரை, அதிகாரிகள் கொத்தோடு அள்ளி சென்று காரில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
Recommended Video
தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து, கைகளில் எல்லாம் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், காஸ்ட்லி கார்.. பந்தா லுக்.. இதுதான் ஹரி நாடார்!
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடித்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுடன் இருப்பாரே, சாட்சாத் அவரேதான்..!

பிரச்சாரம்
அவரை பற்றின ஒரு செய்தி வந்துள்ளது.. ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி நாடார், தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆலங்குளம் செல்ல வேண்டி இருந்தது.. அதற்காக, திருவனந்தபுரத்துக்கு பிளைட்டில் சென்று, .அங்கிருந்து காரில் ஆலங்குளம் செல்வதுதான் இவரது பிளான்.

நகைகள்
அதற்காக சென்னை ஏர்போர்ட் வந்தார் ஹரி.. ஆனால், அங்கிருந்தோர் எல்லாரும் ஹரி நாடாரை ஆச்சரியத்துடன் ஒரு லுக்கு விட்டபடியே நகர்ந்தனர்.. வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கமாக செக்கிங் என்பது ஏர்போர்ட்டில் நடக்கும்.. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் தங்கத்தை யாரும் கொண்டு வரக்கூடாது.. இதற்கு தனியாகவே சோதனைகள் உண்டு.. அதிகாரிகளும் உண்டு..

விசாரணை
ஆனால், இப்படி கழுத்தில் மட்டும் கிலோ கணக்கில் நகையுடன் வந்த ஹரியை வினோதமாக பார்த்தனர்.. அவர்கள் மட்டுமில்லை, அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கே லைட்டாக சந்தேகம் வந்தது. அதனால், 28-ம்தேதி காலையில், ஹரிநாடாரை சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள், தடுத்து நிறுத்தினர்.. அவரிடம் விசாரணையும் ஆரம்பித்துள்ளனர்.. கழுத்தில் மட்டுமே கிலோ கணக்கில் நகை இருந்தது..

போலியா?
இதெல்லாம் உண்மையான நகையா? போலியா என்று கேட்டுள்ளனர்.. அதற்கு ஹரிநாடார், எல்லாமே சுத்த தங்கம், 916 ஒரிஜினல் தங்கம் என்று விளக்கம் தந்துள்ளார். இதன்பிறகு, அதிகாரிகள் அவரை திருவனந்தபுரம் பிளைட் ஏறுவதற்கு அனுமதித்தனர்.. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. எனவே திருவனந்தபுரம் வருமானவரித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சுத்த தங்கம்
அதற்குள் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வந்திறங்கினார் ஹரி நாடார்.. அவரை அங்கு தயாராக இருந்த வருமான வரித்துறையினர் அப்படியே கொத்தாக பிடித்து கொண்டு போய் காரில் ஏற்றினர்.. இதனால் ஒரு நிமிஷம் மிரண்டு போய்விட்டார்.. பிறகு அவர் கழுத்தில், கையில் இருந்த எல்லா நகையும் ஒவ்வொன்றாக செக் செய்யப்பட்டன.. கடைசியில் எல்லாமே சுத்த தங்கம் என்று தெரியவந்தது.. ஆனால், 3 கிலோ 450 கிராம் எடை கொண்ட நகைகளை உடம்பெல்லாம் அணிந்துள்ளார் ஹரி.

பணம்
இப்போது அடுத்த சந்தேகம் ஆரம்பமானது.. இவ்வவு நகைகளை வாங்குவதற்கு உங்க கிட்ட ஏது பணம்? என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு ஹரி நாடார், தான் ஒரு சினிமா பிரமுகர், பிசினஸ் மேன், பைனான்ஸ் நடத்தி வருகிறேன் என லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார். இப்போது அடுத்த கேள்வி ஆரம்பமானது.. இந்த வருஷம் ஏன் நீங்க இதுவரைக்கும் வரி செலுத்தவில்லை என்றனர்.. அதற்கு ஹரிநாடார், "இந்த மார்ச் வரைக்கும் டைம் இருக்கே, அதனால் செலுத்திவிடுவேன்" என்றார். அப்போதும் அதிகாரிகள் விடவில்லை.. வரி செலுத்தினால் எந்தவித நடவடிக்கையுமின்றி விடுவிப்போம் என்று சொன்னார்கள்.

ஒப்படைப்பு
இதையடுத்து, வேறு வழியின்றி ஹரிநாடார், தன்னுடைய ஆபீசுக்கு போன் போட்டார்.. பிறகு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் 1 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த ஒப்புக் கொண்டார்.. அதன்பிறகே ஹரிநாடார் அணிந்திருந்த நகைகள், திரும்பவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.. இறுதியாக, 29-ம்தேதி நைட், ஹரி அந்த மொத்த நகையையும் கழுத்தில் போட்டுக் கொண்டு, ஏர்போட்டை விட்டு ஜம்முன்னு தகதகவென வெளியே வந்தார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications