தமிழக கட்சிக்காக ஹவாலா மூலம் ரூ200 கோடி..ஏர்போர்ட்டில் சிக்கிய மலேசியா ரிட்டர்ன் வினோத் திடுக் தகவல்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு மலேசியாவில் இருந்து ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கடத்தி வர இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல் களத்தில் தொடர்ந்து சிக்கும் பெருமளவு பணம் பெரும் புயலையே கிளப்பிக் கொண்டிருக்கிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடியுடன் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ஹோட்டல் ஊழியர்கள் சிக்கினர்ர். நயினார் நாகேந்திரன் தொடர்புடையதாக கூறப்படும் இந்த ரூ4 கோடி விவகாரம் இன்னமும் ஓயவில்லை.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப் எனபவரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
வினோத் குமாரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்றுக்காக தேர்தல் செலவுகளுக்கு ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications