முகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்
Recommended Video

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கண்டுபிடித்து தர கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
காணாமல் போன சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, முகிலன் எங்கிருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்திருந்தது. விசாரணையை தொடரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முகிலனை மீட்க கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முகிலனை கடந்த ஜூலை 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7-ம் தேதி தேதி கைது செய்திருப்பதாகவும், தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications