தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை.. சென்னையிலும் செம.. எங்கெல்லாம் பெய்கிறது?
தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லேசான காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

எங்கு மழை
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
சென்னையில் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், மெரினா, நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. மேலும் அரும்பாக்கம்,கோயம்பேடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த கனமழை
அதேபோல் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கடல் எப்படி
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். கடல் கொஞ்சம் சீற்றமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications