கன மழை.. பெருக்கெடுத்து வரும் வெள்ளம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் உஷார் நிலை.. வெள்ள எச்சரிக்கை
சென்னை: கனமழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பல பகுதிகளிலும் இருந்து மழை நீர் தாழ்வான பகுதிகளுக்கு பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் பத்திரமாக வெளியேற்றப்படக்கூடிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில்தான், மழை, வெள்ளம் போன்ற காரணத்தால் செங்கல்பட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் இன்று மாலை பிறப்பித்துள்ளது. குருவன்மேடு, ரெட்டிபாளையம், பாலூர், ஆத்தூர், திம்மாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் வசிக்கக் கூடியவர்கள் பத்திரமாக வேறு பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications