திணறுது சென்னை.. ஜிஎஸ்டி சாலையில் கடுமையான டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து வரும் வாகனங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் வெளியூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அதிக அளவிலான மக்கள் செல்வதால், வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து வருகின்றன.

சென்னையில் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், பண்டிகை சமயங்களின் போதும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வார இறுதி நாட்களில் சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

Chennai traffic Tambaram


சென்னை நகருக்கு வெளியே புறநகரில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே, சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான். எனினும், இப்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
இன்று சென்னை தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சில கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.

தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

ரயில் சேவை ரத்து காரணமாக, பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+