மழையை வாரி வீசிய நிவர்.. ஜாவாவா?.. என்பீல்டா?.. எதா இருந்தாலும் தள்ளு தள்ளு தள்ளேய்!.. செம ஜாம்!!
சென்னை: சென்னையில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.
Recommended Video
நிவர் புயலால் சென்னையில் காலை முதல் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. புயலின் தூரம் சென்னையிலிருந்து 500 கி.மீ. தூரத்தில் இருந்ததால் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம், தேனாம்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, கோயம்பேடு, ஜிபி சாலை, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

மழை நீர்
தற்போது அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவோர் மழை நீரில் தத்தளித்து வருகிறார்கள். சில இடங்களில் வாகனங்கள் நின்று விட்டதால் அதை தள்ளிக் கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அது போல் அண்ணாசாலை, பிராட்வே உள்ளிட்ட இடங்களிலும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.

பள்ளம்
இதனால் வீடுகளுக்கு திரும்புவதில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இருட்டுவதற்குள் வீடு செல்ல மழையில் நனைந்தபடியே செல்கிறார்கள். இன்னும் சிலரோ வண்டியை தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு எங்கே மின்வயர் இருக்குமோ, பள்ளம் இருக்குமோ என்ற அச்சத்துடனேயே கடக்கிறார்கள்.

பூந்தமல்லி
சென்னை பூந்தமல்லி ஹைரோடு, ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு பகுதிகளில் வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகர்ந்து வருகிறது. சில வாகனங்கள் ரிப்பேர் ஆகிவிடுவதால் இயக்க முடியாமலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

முறிந்த மரம்
அது போல் புறநகர் பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. தண்ணீருடன் விஷஜந்துகளும் பரவி வருகிறது. அது போல் மாம்பலம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications