ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இதய நோயால் உயிருக்கு போராடும் 3 வயது கிருஷ்ணகிரி சிறுமி.. ஆபரேஷனுக்கு உதவுங்க
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிறந்து 3 வயது 7 மாதங்களே ஆன தீக்ஷிகா என்ற பெண் குழந்தை இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.2.60 லட்சம் தேவையாக உள்ளது. உங்களின் சிறு உதவி இந்த குழந்தையின் உயிரை காக்கும் என்பதால் உங்களின் அந்த குழந்தையின் குடும்பத்தினர் உதவி கேட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குணா. திருமணம் ஆனவவர். கூலி தொழிலாளியான இவர் கட்டட வேலைகளுக்கு சென்று வருகிறார். இவர் தினமும் ரூ.500 மட்டுமே சம்பாதிக்கிறார். இவரது உழைப்பில் தான் குடும்பமே வாழ்ந்து வருகிறது. இவரது மகள் பெயர் தீக்ஷிகா. இப்போது 3 வயது 7 மாதங்கள் ஆகிறது.

தீக்ஷிகா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்பிறந்தார். தீக்ஷிகாவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது மேற்கொண்ட பரிசோதனையின்போதே குழந்தைக்கு இதய பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையின் இதய பிரச்சனை தானாக சரியாகிவிடும் என்று நினைத்தனர்.
ஆனால், குழந்தை பிறந்து 3 வயது 7 மாதங்கள் ஆகியும் இன்னும் இதய பிரச்சனை சரியாகவில்லை. சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும், இதய பிரச்சனை சரியாகவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், குணா கூலி வேலை செய்து ஏழையாக உள்ளார். இதனால் அறுவை சிகிச்சைக்கு போதுமான அளவு அவரிடம் நிதி இல்லை. இதனால் அவர் தாமதப்படுத்தினார்.

இதற்கிடையே தான் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மியாட் (MIOT)மருத்துவமனை நடத்திய இலவச இதயநோய் கண்டறியும் முகாமில் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 'Severe Pulmonary Hypertension' கூடிய 'Large Perimembranous Ventricular Septal Defect (VSD)' எனப்படும் உயிருக்கு ஆபத்தான இதய நோய் பாதிப்பு உறுதியானது.
தீக்ஷிகாவின் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அறுவை சிகிச்சை அவசியம் என்று தெரிவித்தனர். மேலும் இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகள் நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க 'VSD closure' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இருப்பினும் அன்றாட செலவுகளுக்கே திணறும் இந்த குடும்பத்தால் இதய அறுவை சிகிச்சைக்கான நிதியை திரட்ட முடியவில்லை. இதனால் தீக்ஷிகாவின் இதய அறுவை சிகிச்சை தாமதப்பட்டு வருகிறது.

இதய அறுவை சிகிச்சை மற்றும் தொடர்புடைய மருத்துவ செலவுகளக்கு மொத்தமாக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் தேவையாக உள்ளது. அதாவது இதய அறுவை சிகிச்சை (Cardiac surgery), தீவிர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை (ICU care), மருத்துவமனையில் தங்குவது (Hospital stay), அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகள் (Post-operative investigations), மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை (Medications and follow-up treatment) உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் செலவு வரும்.
தீக்ஷிகாவின் குடும்பத்தினரால் இந்த பெரும் தொகையைத் திரட்டுவது முற்றிலும் இயலாத காரியம். அவர்கள் இப்போது தங்கள் மகளின் உயிரைக் காப்பாற்ற நல்ல உள்ளம் படைத்த கொடையாளர்களிடம் உதவி கேட்டுள்ளனர். நீங்கள் உதவினால் நிச்சயம் தீக்ஷிகாவின் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். மற்ற குழந்தைகளை போல் தீக்ஷிகாவால் நோயின்றி வளமாக வாழ முடியும். உதவுங்கள் ப்ளீஸ்..












Click it and Unblock the Notifications