தர்மேந்திராவுடன் நான் வாழவில்லை.. முதல்முறையாக ரகசியத்தை உடைத்த ஹேமமாலினி.. காரணம் என்ன?
சென்னை: பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுடன் தான் வாழாததற்கு என்ன காரணம் என்பதை பாலிவுட் நடிகை ஹேமமாலினி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் தர்மேந்திராவும் ஹேமமாலினியும் பாலிவுட் படங்களில் ஒன்றாக நடித்தபோது காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் 1980 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்ட போது தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர். 1954 ஆம் ஆண்டு பர்காஷ் கவுர் என்பவரை தர்மேந்திரா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தன்னுடன் நடித்த ஹேமமாலினி மீது காதல் வயப்பட்ட அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே ஹேமமாலினியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஹேமாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது ஏற்கெனவே கல்யாணம் ஆனவருடன் தனது மகள் கல்யாணம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. எனினும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே ஹேமா திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு பர்காஷ் கவுர் பெரிதாக எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. அது போல் தர்மேந்திராவுக்கும் முதல் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு பிரிய மனமில்லை.
இதனால் முதல் மனைவி, அவர்களது குழந்தைகள் சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா, அஜிதா ஆகியோருடனும் ஹேமமாலினியுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு இஷாவும் 1985 ஆம் ஆண்டு அஹானாவும் ஹேமமாலினிக்கு பிறந்தனர்.
இந்த நிலையில் பாஜகவில் இணைந்து எம்பியாக உள்ள ஹேமமாலினி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இது நடக்க வேண்டும் என யாரும் விரும்பவில்லை. ஆனாலும் நடந்தது. தானாக எது நடந்ததோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கையை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் கணவர், குழந்தைகள் என சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். ஆனால் சில நேரங்களில் அது சரியாக இருப்பதில்லை. என்னுடைய வாழ்க்கை குறித்து நான் தவறாக கருதியதில்லை. எனது குழந்தைகளுடன் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். அவர்களை நன்கு வளர்த்தேன்.
குழந்தைகள் வளர்ப்பில் தர்மேந்திரா எந்த நேரத்திலும் உடன் இருந்திருக்கிறார். குழந்தைகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என அவர்தான் கவலைப்பட்டு கொண்டிருந்தார். நான் அது நடக்கும் என கூறுவேன். நேரம் நன்றாக இருந்தால் நல்ல வரன் அமையும் என்பேன். கடவுளின் கிருபையால் எல்லாம் நடக்கும் என்பேன் என்றார்.
தர்மேந்திராவை ஹேமமாலினி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இதுவரை விவாகரத்து பெறவில்லை, அது போல் தர்மேந்திராவின் முதல் மனைவி தனது மகள்களுடன் வசித்து வருகிறார். தர்மேந்திராவுடன் ஹேமமாலினி வாழவில்லை என தகவல்கள் வந்த போதிலும் அதுகுறித்து எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருந்த ஹேமமாலினி தற்போது உண்மையை உடைத்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications